April 30, 2026

கார் கவிழ்ந்த விபத்தில் 4 வயது சிறுமி பலி.. 3 சிறுவர்கள் படுகாயம்…

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் (45), தனது காருக்கு பெட்ரோல் நிரப்பச் செல்ல தயாரான நிலையில், அவரது சகோதரர் பால்பாண்டியின் மகன் துரைப்பாண்டி (17) தான் சென்று பெட்ரோல் நிரப்பி வருவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து முருகன் காரை அவரிடம் ஒப்படைத்தார். துரைப்பாண்டி காரை எடுத்துச் செல்லும்போது, உறவினர்களின் குழந்தைகளோடு சென்றுள்ளார். திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 4 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் 3 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.