தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் நேற்று முன்தினம் போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் வாலிபர்கள் சிலர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கீதா மங்கேசை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த திருவோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து அங்கே விரைந்து சென்றார். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்த செல்வேஷ் (வயது 30), போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துவை இரும்புக் கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

More Stories
மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
கால்வாயில் விழுந்து உயிருக்கு போராடிய முதியவர்! 3 நாட்கள் இருட்டுக்குள் தவிப்பு:
திருவண்ணாமலையில் அடித்து உடைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்..