வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லையா?- இன்று ஒரு நாள் தான் அவகாசம்!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான இன்று ஒருநாள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வருமான வரி கணக்கை  ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30-ம் தேதி தாக்கல் செய்ய கடைசி தேதியாகும். ஆனால் நடப்பாண்டு, ஐடிஆர் படிவத்தில் சில மாற்றங்கள் காரணமாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பர் 15-ம் தேதி (நேற்று) வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. வழக்கத்தை விட சம்பளதாரர்களுக்கு இந்த முறை 45 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே தங்களுடைய வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று வருமானவரித்துறை வலியுறுத்தி வந்தது.

இந்தநிலையில், கடைசி நாளான நேற்று நள்ளிரவு வரை சம்பளத்தாரர்கள் வருமானவரி கணக்கை தாக்கல் செய்தனர். இதற்கிடையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30-ம்  தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்த வருமான வரித்துறை செப்டம்பர் 15-ம் தேதி தான் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள், இதற்கான தேதி எதையும் தற்போது வரை நீட்டிக்கவில்லை என்று விளக்கம் தந்திருந்தது.

இந்நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று ஒருநாள் (செப்டம்பர் 16) கூடுதல் அவகாசத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது. நேற்று வருமான வரி இணையதளம் முடங்கியதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் கணக்கு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Posts

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு…375 பொருட்கள் விலையை குறைக்காவிட்டால் புகார் தெரிவிக்கலாம்!

இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் அமலாகியுள்ளது. எனவே, ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை இலவச தொலைபேசி எண்ணிலும், என்சிஹெச் செயலி மற்றும் வலைதளத்திலும் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்​திய அரசின் அறி​விப்​பின்​படி, ஜிஎஸ்டி மறுசீரமைப்பு…

உள்நாட்டு பொருட்களையே வாங்க வேண்டும்- பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

அனைவரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும். என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியாவில் 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தம், இன்று முதல் நாடு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *