மருத்துவக் கல்வி இயக்குநராக டாக்டர் வி. லோகநாயகிக்கு கூடுதல் பொறுப்பு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக டாக்டர் வி. லோகநாயகிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தற்போது மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநராகப் பணியாற்றி வரும் டாக்டர் வி. லோகநாயகி, இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் பதவியின் முழு பொறுப்பையும் கூடுதலாக வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.