தமிழகத்தில் உரிமம் முடிந்ததால் டாஸ்மாக் பார்களை இன்றுடன் ( ஜூலை 1) மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் அரசு அங்கீகாரத்தோடு தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 2,000-க்கும் மேற்பட்ட பார்களின் உரிமம் நேற்றுடன் (ஜூன் 30) நிறைவடைந்தது. இந்நிலையில், புதிய டெண்டர் விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படாததால், பார்களின் உரிமத்தை மேலும் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக நீட்டித்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டாஸ்மாக் பார்களின் உரிமம் முடிவடைந்து இருப்பதால் அனைத்து பார்களையும் உடனடியாக மூடுவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 4,765 டாஸ்மாக் கடைகள் இருந்தாலும், அரசு அங்கீகாரத்தோடு சுமார் 2,400 பார்கள் செயல்பட்டு வந்தன. இந்த பார்களுக்கான தற்காலிக ஒப்பந்த நீட்டிப்பு காலம் நேற்று ஜூன் 30-ஆம் தேதியுடன் முழுமையாகக் காலாவதியாகியுள்ளது. இந்த நிலையில், புதிய டெண்டர்கள் கோரப்பட்டு அவை இறுதி செய்யப்படும் வரை மறு அறிவிப்பு வரும் வரை பார்களை மூட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உரிமம் முடிந்ததால் டாஸ்மாக் பார்களை இன்றுடன் ( ஜூலை 1) மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் அரசு அங்கீகாரத்தோடு தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 2,000-க்கும் மேற்பட்ட பார்களின் உரிமம் நேற்றுடன் (ஜூன் 30) நிறைவடைந்தது. இந்நிலையில், புதிய டெண்டர் விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படாததால், பார்களின் உரிமத்தை மேலும் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக நீட்டித்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டாஸ்மாக் பார்களின் உரிமம் முடிவடைந்து இருப்பதால் அனைத்து பார்களையும் உடனடியாக மூடுவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 4,765 டாஸ்மாக் கடைகள் இருந்தாலும், அரசு அங்கீகாரத்தோடு சுமார் 2,400 பார்கள் செயல்பட்டு வந்தன. இந்த பார்களுக்கான தற்காலிக ஒப்பந்த நீட்டிப்பு காலம் நேற்று ஜூன் 30-ஆம் தேதியுடன் முழுமையாகக் காலாவதியாகியுள்ளது. இந்த நிலையில், புதிய டெண்டர்கள் கோரப்பட்டு அவை இறுதி செய்யப்படும் வரை மறு அறிவிப்பு வரும் வரை பார்களை மூட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

More Stories
பவுடர்’ வீடியோ: “கொன்றுவிடுவோம் என மிரட்டுகிறார்கள்” – பள்ளி நண்பர் பரபர புகார்…
மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்; ‘லிவ்-இன்’ காதலனை கழுத்தை நெரித்து கொன்ற சகோதரிகள்:
ரூ.504 கோடி மோசடி வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி கைது: