சென்னை: தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 22) மீண்டும் கூடுகிறது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் இந்த முதல் கூட்டத்தொடரில், பல்வேறு முக்கிய விவாதங்களும் புதிய அறிவிப்புகளும் வெளியாகும் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்: கடந்த ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டத்தொடரில், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விரிவான விவாதம் நடைபெறவுள்ளது.
புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு? முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முழுமையான விவாதக் கூட்டம் என்பதால், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த முக்கியத் திட்டங்கள் குறித்த புதிய அறிவிப்புகளை அரசு இன்று வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் வியூகம்: அதே வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் இதர எதிர்க்கட்சிகள், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களை அவையில் எழுப்பவும், அரசை முற்றுகையிடவும் வியூகம் வகுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் இன்றைய சட்டமன்றக் கூட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரசாரமான விவாதங்களுடன் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும் இக்கூட்டத்தொடர், நாளை (ஜூன் 23) முதலமைச்சரின் பதிலுரையுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!