குளித்தலை அருகே சாலை வளைவில் திரும்பியபோது, தனியார் பேருந்தில் இருந்த பெண் பயணி கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கே.பேட்டை ஊராட்சி திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் மாலதி (45). திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று ஊருக்கு திரும்பியுள்ளார் மாலதி. குளித்தலை சுங்கவாயிலில் இருந்து மாயனூர் செல்லும் தனியார் பேருந்தில் பயணித்துள்ளர்.
கரூர்- திருச்சி தேசிய புறவழிச் சாலையில் இணையும் இடத்தில் மேலக்குறப்பாளையம் வளைவில் பேருந்து அதி வேகமாக சென்று திரும்பியதில் பேருந்து முன் படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்த மாலதி பேருந்தில் இருந்து சாலையில் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
அவரை சக பயணிகள் மீட்டு குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாலதி உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து குளித்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாலதியின் உடலை பிரேத பரிசோதனை பிரிவுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பேருந்தை வேகமாக இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

More Stories
திருப்பரங்குன்றம் பாமக ஒன்றிய செயலாளர் தாயார் தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு கைது செய்யாத ஆஸ்டின்பட்டி போலீசார் தெய்வம் தரப்பில் குற்றம் சாட்டு!
சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்புள்ள 35 டெண்டர்கள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடத்தில் உள்ள முக்கியத் தனியார் தொழிற்சாலைகளில் முதல்-அமைச்சர் ஆய்வு