குளித்தலை அருகே சாலை வளைவில் திரும்பியபோது, தனியார் பேருந்தில் இருந்த பெண் பயணி கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கே.பேட்டை ஊராட்சி திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் மாலதி (45). திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று ஊருக்கு திரும்பியுள்ளார் மாலதி. குளித்தலை சுங்கவாயிலில் இருந்து மாயனூர் செல்லும் தனியார் பேருந்தில் பயணித்துள்ளர்.
கரூர்- திருச்சி தேசிய புறவழிச் சாலையில் இணையும் இடத்தில் மேலக்குறப்பாளையம் வளைவில் பேருந்து அதி வேகமாக சென்று திரும்பியதில் பேருந்து முன் படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்த மாலதி பேருந்தில் இருந்து சாலையில் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
அவரை சக பயணிகள் மீட்டு குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாலதி உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து குளித்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாலதியின் உடலை பிரேத பரிசோதனை பிரிவுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பேருந்தை வேகமாக இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

More Stories
தொழில் முதலீட்டு மாநாடு: முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு பயணம்
பொதுமக்கள் மீது வெடிகுண்டு வீச்சு: தஞ்சை, பந்தலூரில் பரபரப்பு — 7 பேர் கைது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்