டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கும் விவகாரம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த திமுக ஆட்சியின்போது இந்த விவகாரத்தை கடுமையாக விமர்சித்த தற்போதைய முதல்வர் விஜய், கரூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது, “பாட்டிலுக்கு 10 ரூபாய்” என குற்றம்சாட்டி பிரசாரம் செய்திருந்தார். அது பெரிய அளவில் பேசுபொருளாகியிருந்தது. எனினும், தற்போதைய தவெக ஆட்சியிலும் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்தசூழலில், டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 கூடுதலாக வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூடுதல் தொகையை வசூலிக்க கூடாது எனவும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்திருந்தது.
இதைத்தொடர்ந்து எம்.ஆர்.பி விலையை விட கூடுதலாக பாட்டிலுக்கு 10 ரூபாய் விற்கும் கடைக்காரர்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர். மேலும், இது சம்பந்தமாக இமெயில் மூலம் புகார் வந்ததையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து, கடந்த 20 நாட்களில் மட்டும் கூடுதல் விலையை வசூலித்த 200க்கும் மேற்பட்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
மூடப்பட்டிருந்த டாஸ்மாக் பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு தவெகவினர் ரகளை…
தொடரும் உயிர் பலி.. 5 நாளில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு…