தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பகுதியை சேர்ந்தவர் விவசாயி அந்தோணி ராஜ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்காசி சிவகிரி காவல் நிலையம் சென்று புகார் கொடுத்த போது, புகாரினை பெற்றுக்கொள்ளாமல் காவலர்கள் அவரை மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் அருந்திய நிலையில் உயிருக்கு ஆபத்தான சூழலில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 நாட்களில் உயிரிழந்தார். இறந்தவரின் மகன் இசக்கி அளித்த புகாரின் பேரில் சம்பவத்தில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் முரளிதரன், காவல்நிலைய எழுத்தாளர் கனகராஜ், காவலர் முத்துக்கண்ணன் ஆகிய காவலர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தற்கொலைக்கு தூண்டியதாக காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று அவர்கள் மூவரையும் பணியிடை நீக்கம் செய்ய நெல்லை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!