தமிழகத்தில் பாஜகவுக்கு நோ என்ட்ரி! – முதல்வர் ஸ்டாலின் அதிரடி

திருவள்ளூரில் நடைபெறற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆவடி, திருவள்ளூர், பூவிருந்தவல்லி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் திருத்தணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார்.

நோ என்ட்ரி..!

அப்போது அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டின் வடக்கு வாசலான திருவள்ளூருக்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டுக்கு ஆபத்து எப்போதும் வடக்கில் இருந்துதான் வரும். வடக்கில் இருந்து வரும் என்டிஏ என்ற ஆபத்தை தடுத்து நிறுத்தும் தேர்தல் இது. எடப்பாடி பழனிசாமி இருக்கும் தைரியத்தில்தான் பாஜக ஆட்சி அமைக்க நினைக்கிறது. இந்த தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்கு, என்டிஏக்கு நோ என்ட்ரியாக இருக்க வேண்டும்.” என்றார்

அதிமுக = பாஜக

பாஜகவின் கிளைக்கழகம் தான் அதிமுக. அதிமுக ஆட்சிக்கு வந்தால் மும்மொழிக்கொள்கையை கொண்டு வருவோம் என பாஜகவினர் கூறி வருகின்றனர். வாய் மூடி இருக்க நாங்கள் அடிமை சாமி கிடையாது. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்கிற சவாலில் வெற்றி பெற வேண்டும்.

கூவத்தூரில் தவழ்ந்து, ஊழலில் திளைத்து, உரிமைகளை தொலைத்து, தமிழ்நாட்டை நாசப்படுத்திய பழனிசாமி ஆட்சியில் வளர்ச்சி நின்று போனது. பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி வெறும் 0.07 சதவீதம் மட்டுமே. ஆனால் இன்றைக்கு 11.19 சதவீதம் வளர்ச்சி. தமிழ்நாடு முழுக்க பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறோம். இந்தியாவுக்கே ரோல் மாடலாக தமிழ்நாடு உள்ளது என்று முதல்வர் கூறினார்.

ஆளுநர் – ஆர்.எஸ்.எஸ்

தமிழ்நாடு என்பது பலர் கண்ணை உறுத்துகிறது. தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்பது ஆர்.என்.ரவியின் குரல் அல்ல. அது ஆர்.எஸ்.எஸ். குரல். நான் உயிரோடு இருக்கும் வரை, திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட்டுப் பார்க்கும் தைரியம் உண்டா? தைரியம் இருந்தால் தட்சிணப் பிரதேசம் என மாற்ற முடியுமா? சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை தான் சூப்பர் ஸ்டார்” என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

Related Posts

சிவகாசி களம்: ராஜேந்திர பாலாஜிக்கு மக்கள் ஆதரவா? அதிருப்தியா? – ஓர் அலசல்!

சிவகாசி: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், தமிழகமே உற்றுநோக்கும் தொகுதிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது ‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கப்படும் சிவகாசி. இங்கு அதிமுக சார்பில் களம் இறங்கியுள்ள முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, மீண்டும் தனது கோட்டையைத் தக்கவைக்க தீவிரமாகப் போராடி…

Continue reading
விஜய்யையும்; எடப்பாடி பழனிசாமியையும் ஒரே மேடையில் பேச்சால் விளாசிய திருமாவளவன்…!

“செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “இங்கு ஒரு நடிகர் இருக்கிறார். கட்சி தொடங்கியதும் சந்திக்கும் முதல் தேர்தலிலேயே முதல்வராக வேண்டும் என ஆசைப்படுகிறார். பல…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *