இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இந்திய அரசு வீடுகளைக் கட்டித் தரும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 145 வீடுகளை கொழும்புவில் நடந்த நிகழ்ச்சியில் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒப்படைத்தார். இத்துடன் மூன்றாம் கட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு 4,000 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் பேசிய இந்திய குடியரசு துணைத் தலைவர், இலங்கைத் தமிழ் மக்களுக்கு இதுவரை 50,000 வீடுகளை இந்திய அரசு வழங்கி உள்ளது என்றும், மேலும் 10,000 வீடுகள் நான்காம் கட்ட இந்திய வீடமைப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

More Stories
மு.க. ஸ்டாலின் தேசத்திற்காகப் போராடும் தலைவர்: அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம்
துணை முதலமைச்சர் உதயநிதி சொத்து விவகாரம்.. உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல்!
அன்புமணி தலைமையிலான ‘துரோக கும்பலை 18 தொகுதிகளிலும் வீழ்த்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ் ஆவேசம்