சென்னை : வாடிக்கையாளர் போல் நடித்து ரூ.53 லட்சம் நகை திருட்டு: 20 முறை கடையில் கைவரிசை:

நகைக் கடை​யில் வாடிக்​கை​யாளர் போல் நடித்​து, ரூ.53 லட்​சம் மதிப்​புள்ள தங்க நகைகளை திருடிச் சென்ற பெண்ணை போலீ​ஸார் கைது செய்​தனர். சென்​னை, எம்கேபி நகர், மேற்கு குறுக்கு தெரு​வைச் சேர்ந்​தவர் அன்​குஷ் (33). அப்​பகு​தி​யில் நகைக் ​கடை நடத்தி வரு​கிறார்.

சமீபத்​தில் கடை​யில் இருந்த தங்க நகை​களின் இருப்பை சரி​பார்த்த போது, சுமார் ரூ.53 லட்​சம் மதிப்​புள்ள 49 பவுன் தங்க நகைகள் மாய​மாகி இருந்​தது தெரிய வந்​தது. இதுகுறித்​து, அவர் நடத்​திய விசா​ரணை​யில், கடந்த 2 மாதங்​களில் ஒரே பெண் சுமார் 20 முறை கடைக்கு வந்து நகைகள் வாங்​கி​யிருந்​தது தெரிய வந்தது.

அந்த பெண் மீது சந்​தேகம் ஏற்​பட்​ட​தால், இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​பேரில், போலீ​ஸார் வழக்​குப் பதிந்து நகைக்​கடை​யில் உள்ள சிசிடிவி கேம​ரா​வில் பதி​வான காட்​சிகள் அடிப்​படை​யில் விசாரணை நடத்தினர்.

இதில், வாடிக்​கை​யாளர் போல் நகைகளை வாங்​கு​வது போல நடித்​து​விட்​டு, சிறிய அளவி​லான தங்க நகைகளை திருடிச் சென்​றது தெரிய​வந்​தது. இது தொடர்​பாக, மீஞ்​சூர், பத்​மாவதி நகரைச் சேர்ந்த ரெஹானா (50) என்​பவரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், கடந்த 2 மாதங்​களில் சுமார் 20 முறை நகைக்​கடைக்கு வந்​து, ஊழியர்​களின் கவனத்தை திசை​திருப்பி சிறிய வகை தங்க நகைகளை திருடிச் சென்​றது தெரிய வந்​தது.

அவரிட​மிருந்து சுமார் 24 பவுன் தங்க நகைகளை போலீ​ஸார் மீட்​டனர். மேலும், மீத​முள்ள நகைகளை மீட்​க​வும் போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர். இதற்​கிடையே, கைது செய்​யப்​பட்ட ரெஹானா சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.