நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் உள்ள கிராமத்தில் கட்டுமான தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதுடைய மகள் இருக்கிறார். சிறுமி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத காரணத்தால், மீண்டும் தேர்வு எழுத வீட்டில் இருந்து படித்து வருகிறா
இதனிடையே, சில நாட்களுக்கு முன்னதாக சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடந்த சோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதியானது. மேலும், சிறுமி தன்னிடம் 5 பேர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பம் கலைக்கப்பட்டதாகவும் கூறி இருக்கிறார். சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமலேயே கர்ப்பமும் கலைக்கப்பட்டதாக தெரியவருகிறது.
இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையின் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சிறுமியின் தாய்மாமா தங்கவேல் (வயது 40) கைது செய்யப்பட்டார். சிறுமியின் உறவினர் மகனான 15 வயது சிறுவனையும் அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
கனடா பெண்ணுக்கு நிர்வாண பூஜை செய்து மிரட்டல்: தென்காசி கிளி ஜோதிடர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரி: சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புதிய திட்டம் தொடக்கம்!