நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் உள்ள கிராமத்தில் கட்டுமான தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதுடைய மகள் இருக்கிறார். சிறுமி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத காரணத்தால், மீண்டும் தேர்வு எழுத வீட்டில் இருந்து படித்து வருகிறா
இதனிடையே, சில நாட்களுக்கு முன்னதாக சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடந்த சோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதியானது. மேலும், சிறுமி தன்னிடம் 5 பேர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பம் கலைக்கப்பட்டதாகவும் கூறி இருக்கிறார். சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமலேயே கர்ப்பமும் கலைக்கப்பட்டதாக தெரியவருகிறது.
இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையின் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சிறுமியின் தாய்மாமா தங்கவேல் (வயது 40) கைது செய்யப்பட்டார். சிறுமியின் உறவினர் மகனான 15 வயது சிறுவனையும் அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

More Stories
பெரம்பூர்: மடத்தில் முகம் சிதைத்து வாலிபர் கொலை: போலீசார் விசாரணை…
ஆவடி: முதல் மனைவியை ஏமாற்றி 2 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் கைது…
மது குடித்துவிட்டு தகராறு: கணவரை கட்டிலில் கட்டிபோட்டு மின்சாரம் பாய்ச்சிய மனைவி…