April 15, 2026

பிஹார் மக்கள் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளனர்: அண்ணாமலை மகிழ்ச்சி!

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை பிஹார் மக்கள் அளித்து வரலாற்றை உருவாக்கி உள்ளனர் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை பிஹார் மக்கள் அளித்து வரலாற்றை உருவாக்கி உள்ளனர். பிரதமரின் தலைமை, நிதிஷ்குமாரின் ஆட்சி மீது பிஹார் மக்கள் மகத்தான நம்பிக்கை வைத்துள்ளதை தேர்தல் வெற்றி உறுதி செய்துள்ளது.

இந்த வெற்றி, பிஹாரின் ஒவ்வொரு சகோதர, சகோதரியும் வளர்ச்சி சார்ந்த எதிர்காலத்தில் வைத்திருக்கும் நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதிகாரமளித்தல், செழிப்பு மற்றும் ஒற்றுமைக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அர்ப்பணிப்பு சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் எதிரொலித்துள்ளது. தவறாக வழிநடத்தவும் பிளவுபடுத்தவும் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்துள்ளது. தேர்தல் முடிவு சந்தர்ப்பவாத அரசியலை விட நல்லாட்சி, முன்னேற்றம், தேசிய நலன் மேலோங்கி உள்ளதை காட்டுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.