September 10, 2026

தூத்துக்குடி விமான நிலையம் – ஆங்கிலப் பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

தூத்துக்குடி:
தூத்துக்குடி விமான நிலையத்தின் ஆங்கிலப் பெயரை மாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் இதுவரை “Tuticorin Airport” என அழைக்கப்பட்டு வந்த விமான நிலையம் இனிமேல் அதிகாரப்பூர்வமாக “Thoothukudi Airport” என அழைக்கப்படும்.
தூத்துக்குடி நகரத்தின் பெயரை தமிழின் சரியான உச்சரிப்பில் ஆங்கிலத்திலும் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வந்தது. குறிப்பாக உள்ளூர் மக்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த மாற்றத்தைக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை, தற்போது பெயர் மாற்றத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விமான நிலையத்தின் ஆங்கிலப் பெயர் அதிகாரப்பூர்வ பதிவுகள் மற்றும் விமானப் போக்குவரத்து தொடர்பான ஆவணங்களில் “Thoothukudi Airport” என மாற்றப்படும்.
தென்தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கும் தூத்துக்குடியில் உள்ள இந்த விமான நிலையம் வாகைகுளம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. பெயர் மாற்ற முடிவை மாவட்ட மக்கள் வரவேற்றுள்ளனர்.

You may have missed