September 10, 2026

நெல்லை : ‘9வது பொருநை புத்தகத் திருவிழா’ ஆரம்பம் : அகழ்வாராய்ச்சி முதல் ஏஐ வரை பல்வேறு புத்தகங்கள்

நெல்லையில் ‘9-வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா’  விமரிசையாக தொடங்கப்பட்டுள்ளது.

​திருநெல்வேலி பாளையங்கோட்டை என்.எச். சாலையில் உள்ள பொருநை நெல்லை வர்த்தக மையத்தில் (Nellai Trade Centre) இந்த கண்காட்சி நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தலைவர் எம். அப்பாவு இந்தப் புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

இந்த புத்தக கண்காட்சி பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 22, 2026 வரை என மொத்தம் 13 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.

​கண்காட்சியின் சிறப்பம்சங்கள்:

இலக்கியம், அறிவியல், வரலாறு, பொறியியல், மருத்துவம், மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

​தொல்லியல் கண்காட்சி:

ஆதிச்சநல்லூர், கொற்கை மற்றும் சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட தொன்மையான பொருட்களை விளக்கும் வகையிலான சிறப்புத் தொல்லியல் மாதிரி கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது.

​மாணவர்களுக்கான போட்டிகள்:

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் தினமும் நடத்தப்படுகின்றன.

​கலை நிகழ்ச்சிகள்

மாலை வேளைகளில் பிரபல எழுத்தாளர்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
​மேலும், இந்த ஆண்டு தேர்தல் வரவுள்ளதை ஒட்டி, மாதிரி வாக்குச்சாவடி மையம் மற்றும் விழிப்புணர்வு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

​அரசுத் துறை அரங்குகள்:

இஸ்ரோ (ISRO), கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மற்றும் கல்வி சார்ந்த தனித்தனி அரங்குகள் உள்ளன.

You may have missed