தமிழ்நாட்டில் இன்று (ஏப்.23) காலை 7 மணிக்கு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்களிப்பதற்காக பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை அடுத்த திருமங்கலம் மேல்கோட்டை வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரிமுத்து என்பவர் மீது பாலமுருகன் என்பவர் கத்தியை வீசியுள்ளார். அப்போது கத்தி தவறுதலாக மாரிமுத்து அருகே நின்றிந்த பெண்ணிண் காலில் குத்தி காயம் ஏற்பட்டது. முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்த போது தவறுதலாக பெண் மீது கத்தி பட்டுள்ளது. போலீசார் பாலமுருகனை கைதுசெய்துள்ளனர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
கனடா பெண்ணுக்கு நிர்வாண பூஜை செய்து மிரட்டல்: தென்காசி கிளி ஜோதிடர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரி: சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புதிய திட்டம் தொடக்கம்!