கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஜோஸ் (47). பிரபல தங்க நகைகள் தயாரிப்பு தொழிற்கூடத்தில் பணியாற்றி வருகிறார். இவர், நாகர்கோவில், திருநெல்வேலி, வள்ளியூர் பகுதிகளில் உள்ள நகை கடைகளுக்கு கொடுப்பதற்காக 1 கிலோ 400 கிராம் தங்க நகைகளை ஒரு பேக்கில் எடுத்துக்கொண்டு நேற்று இரவு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சூரில் ஏறினார்.
காலை 6.30க்கு ரயில் குமரி மாவட்டம், குழித்துறை ரயில் நிலையம் வந்தபோது கண் விழித்தவர், நகை பேக்கை ஒருவர் எடுத்து கொண்டு வேகமாக ஓடுவதை பார்த்தாராம். புகாரின்படி குழித்துறை ரயில்வே போலீசார் வழக்குபதிந்து கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும், ஜோஸ் கூறும் தகவல்கள் உண்மைதானா என்றும் விசாரிக்கின்றனர்.

More Stories
டாஸ்மாக் கடைகளில் 54 புதிய பிராண்ட் மது வகைகளை விரைவில் அறிமுகப்படுத்த முடிவு
மரணத்திலும் இணைபிரியாத தம்பதி: மனைவி இறந்த 3 மணி நேரத்தில் கணவர் உயிர் பிரிந்தது!
நாகர்கோவில் சிறையில் கைதி அடித்துக் கொலை: சிறை வார்டர்கள் சஸ்பெண்ட்; 8 பேர் அதிரடி கைது!