சென்னை: மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு எதிராக அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கருப்புச் சட்டத்திற்கு கிடைத்த வெற்றி
தொகுதி மறுவரையறை என்பது தமிழக மக்களின் அரசியல் உரிமைகளைப் பறிக்கும் ஒரு “கருப்புச் சட்டம்” என்று குறிப்பிட்ட முதல்வர், இந்த ஆபத்தை ஓராண்டிற்கு முன்பே கணித்து திமுக போராட்டங்களைத் தொடங்கியதாகத் தெரிவித்தார். “இந்தத் திட்டத்தை முறியடிக்க இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் இணைந்து நாம் நடத்திய சட்டப் போராட்டம் இன்று வெற்றியில் முடிந்துள்ளது,” என அவர் பெருமிதம் கொண்டார்.
பாஜக – அதிமுக மீது தாக்குதல்
தமிழக மக்களைத் தாய்நாட்டிலேயே அகதிகளாக மாற்ற முயன்ற பாஜகவிற்கும், அவர்களுக்குப் பாதசேவை செய்யும் ‘ஏவல் அடிமைகளான’ அதிமுகவிற்கும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள் என்று அவர் சூளுரைத்தார்.
போராட்டக் களம்
சமீபத்தில் இந்த மசோதாவிற்கு எதிராகக் கருப்புச் சட்ட நகலை எரித்தது மற்றும் திண்டுக்கல்லில் நடைபெற்ற போராட்டங்களைக் குறிப்பிட்ட முதல்வர், “50, 60-களில் பார்த்த பழைய திமுகவின் வீரியத்தை இப்போது டெல்லி பார்த்திருக்கிறது. பெண்களுக்கான இடஒதுக்கீடு என்ற முகமூடி அணிந்து கொண்டு வந்த இந்த ஏமாற்றுத் திட்டத்தை திமுக முன்னின்று முறியடித்துள்ளது,” என்றார்.
நன்றி அறிவிப்பு
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குத் துணையாக நின்ற இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கும், குறிப்பாகத் தமிழக மக்களுக்கும் முதல்வர் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். “ஒன்றிணைந்து வெல்வோம்” என்ற முழக்கத்துடன் தனது உரையை அவர் நிறைவு செய்தார்.

More Stories
குடும்பத்தை சிதைத்த பெருமை சௌமியாவையே சேரும்” பாமக நிறுவனர் ராமதாஸ்
திருச்சியில் இன்று அதிரடி! தவெக தலைவர் விஜய் மெகா ரோடு ஷோ !
என்கிட்ட மோதாதே.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி பரப்புரை