திருச்சியில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், முதலமைச்சர் தனக்கு அமைச்சருக்கு நிகரான பொறுப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்ததுடன், அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். கிராமப்புறங்களில் இருந்து வேலை வாய்ப்புக்காக நகரங்களுக்கு வரும் மக்களுக்கு தங்க இடம் இல்லாத நிலை இருப்பதால், அவர்களுக்கு வீடுகள் வழங்கி நகர்ப்புறத்தில் மக்களோடு மக்களாக வாழும் சூழலை உருவாக்கவே இந்த துறை தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
திருச்சியில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், முதலமைச்சர் தனக்கு அமைச்சருக்கு நிகரான பொறுப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்ததுடன், அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். கிராமப்புறங்களில் இருந்து வேலை வாய்ப்புக்காக நகரங்களுக்கு வரும் மக்களுக்கு தங்க இடம் இல்லாத நிலை இருப்பதால், அவர்களுக்கு வீடுகள் வழங்கி நகர்ப்புறத்தில் மக்களோடு மக்களாக வாழும் சூழலை உருவாக்கவே இந்த துறை தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆளும் தரப்பின் மீது வரும் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு கவலைப்படாமல், உண்மை இருந்தால் மட்டுமே விசாரணை நடத்தப்படும் என்றும், நேர்மையான அதிகாரிகள் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் நியமனம் தொடர்பாக முதலமைச்சர் திறமையான அதிகாரிகளை தேர்வு செய்து நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரசியல் சூழலில் கட்சி மாற்றங்கள், எம்.எல்.ஏக்களின் ராஜினாமா போன்றவை அவர்களின் தனிப்பட்ட முடிவாகும் என்றும், அதைப் பற்றி அரசு அல்லது துறை நேரடியாக கட்டுப்பாடு செலுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
மேலும், கட்சி இணைப்பு, குற்றச்சாட்டு அரசியல் போன்ற விவகாரங்கள் குறித்து பேசும்போது, அரசியலில் எதுவும் நடக்கலாம் எனவும், தேர்தல் நேரத்தில் மட்டுமே சில விஷயங்கள் தெளிவாகும் எனவும் தெரிவித்தார். காவிரி, மேகதாது அணை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், தமிழ்நாட்டின் நீர் உரிமையை பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் கூறினார். அதிமுக இணைப்பு குறித்து சம்பந்தப்பட்ட தலைவர்கள் தான் விளக்கம் அளிக்க முடியும் என்றும், திருச்சி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள திட்டங்கள் அமைச்சர்கள் மூலம் ஆய்வு செய்து விரைவில் முன்னேற்றம் காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இறுதியாக, முதலமைச்சர் விரைவில் திருச்சிக்கு வருகை தர உள்ளதாகவும், அவரது வருகை குறித்த தேதி மற்றும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறி செய்தியாளர்கள் சந்திப்பை அவர் நிறைவு செய்தார்.

More Stories
டாஸ்மாக் கடைகளில் 54 புதிய பிராண்ட் மது வகைகளை விரைவில் அறிமுகப்படுத்த முடிவு
மரணத்திலும் இணைபிரியாத தம்பதி: மனைவி இறந்த 3 மணி நேரத்தில் கணவர் உயிர் பிரிந்தது!
“அமைச்சர் பதவிக்காக தவெகவுக்கு சென்றோருக்கு விஜய் கொடுத்தது அல்வா” – பழனிசாமி…