குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் குணசீலன் (52). களியக்காவிளை பேரூராட்சி 14-வது வார்டு பாஜ கவுன்சிலராக உள்ளார். அதேபகுதியில் இவருக்கு சொந்தமாக பெட்டிக்கடை, பாறை உடைக்கும் வாகனம், கிணறு தோண்டும் வாகனம் உள்ளது. இந்தநிலையில், அவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக களியக்காவிளை காவல்நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவரது வீட்டிற்கு சென்று போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது அவரது வீட்டின் பின்னால் 27 டெட்டனேட்டர்கள், 30 ஜெலட்டின் குச்சிகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து இருந்தது கண்டறியப்பட்டது. உடனே அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கவுன்சிலர் குணசீலன் மற்றும் வெடி பொருட்களை விற்பனை செய்த பனச்சமூடு பகுதியை சேர்ந்த ராஜன் (75) ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தனர்

More Stories
தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் புறப்படுகிறார் முதல்வர் விஜய்: பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணம்!
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்