தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற பின் விஜய் தொடர்ச்சியாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி தரப்படும் என்ற உத்தரவை முதல்வர் விஜய் (CM Vijay) வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உறுதிமொழி அளித்துள்ளது. இந்தத் திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றை முழுவீச்சில் நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர்.
அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.01.2026 முதல் 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் அதனால் பயன்பெறும்வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதனைக் கனிவுடன் பரிசீலித்து, 01.01.2026 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.
இதனால் 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 2 சதவீதம் உயர்ந்து 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அரசுக்கு 1,230 கோடி ரூபாய் கூடுதல் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் நாட்டில் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் அகவிலைப்படியை ஆண்டுதோறும் இரு உயர்த்துவது வழக்கம். அதன்படி, ஜனவரி மற்றும் ஜூலை மாதம் என 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்த அகவிலைப்படியானது உயர்த்தப்பட வேண்டும்.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகாது. பொதுவாக மார்ச் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் அகவிலைப் படி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால், ஜனவரி மாதத்தில் இருந்து கணக்கிடப்பட்டு அதன் நிலுவைத் தொகையும் சேர்ந்து வழங்கப்படுவது வழக்கம்.
நடப்பு 2026ம் ஆண்டில் முதல் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு கடந்த ஏப்ரல் 18ம் தேதி அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் இதை நடைமுறைபடுத்த கால தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது புதிய அரசு அமைந்து பெரும்பான்மை நிரூபணமாகியுள்ள சூழலில் இந்த அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

More Stories
செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த குழந்தை உட்பட 46 பேர் மீட்பு:
இளம்பெண்ணை கொலை செய்து தோட்டத்திற்குள் குழி தோண்டி புதைத்த சம்பவம்:
திருப்பூர் அருகே சாலை விபத்து: காவலர் உள்பட 6 பேர் உயிரிழப்பு