திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல்வணக்கம்பாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி நடப்பு கல்வியாண்டையொட்டி நாளை மறுதினம் திறக்கப்பட உள்ளது.
இதையொட்டி நேற்று பள்ளி வகுப்பறை, சமையலறை, தலைமையாசிரியர் அறை என அனைத்து பகுதிகளையும் தூய்மைப்படுத்தும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. அப்போது பள்ளியில் உள்ள ஒரு அறையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஊழியர்கள் உடனடியாக தலைமையாசிரியருக்கு தெரிவிக்க முயன்றன். ஆனால் அண்மையில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் பணி நிறைவு பெற்று சென்றதால் யாரிடம் தெரிவிப்பது என தெரியாமல் குழப்பமடைந்தனர். இதனை தொடர்ந்து கிராம மக்கள் மேல்செங்கம் போலீசாருக்கு தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் கோடைவிடுமுறைையயொட்டி பூட்டிக்கிடந்த பள்ளியை யாரோ மர்மஆசாமிகள் கதவு உடைத்து கணினி, ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக மேல்செங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!