திருவொற்றியூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் செங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இரவு மாட்டு மந்தை மேம்பாலம் அருகிலுள்ள மருந்து கடைக்கு மாத்திரை வாங்க சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த நபர் ஒருவர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
மாணவி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே அந்த நபர் பைக்கில் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காலடிப்பேட்டை மேட்டு தெருவை சேர்ந்த மியூசிக் ஆசிரியர் பீட்டர் (30) என்பவரை நேற்று கைது செய்து, விசாரணைக்கு பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

More Stories
மாம்பழம் விற்று வந்த மூதாட்டியிடம், ரூ.500 ‘டம்மி’ நோட்டை கொடுத்து மோசடி..
சிலிண்டர் டெலிவரிக்கு புதிய விதி.. நாளை முதல் அமல்….
சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: