April 26, 2026

கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு…

சென்னை மெரினா சர்வீஸ் சாலையில், மென்பொறியாளர் ஸ்ரீநாத் என்பவரது கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சர்வீஸ் சாலையில் காரை நிறுத்திவிட்டு சூரிய உதயம் பார்க்க கடற்கரை சென்றுவிட்டு திரும்பியபோது கார் எரிந்து சேதமாகியிருப்பதை கண்டு அதியடைந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்தனர். திருவல்லிக்கேணி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.