பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் அடிக்கடி கார் திருடு போவதாக புகார்கள் எழுந்துள்ளன. புகாரின்பேரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, வெள்ளை நிற சுசூகி பலேனோ கார் வந்துள்ளது. போலீசார் நிற்பதை கண்டதும் காரை ஓட்டி வந்தவர் யு-டர்ன் போட்டுள்ளார். அது திருட்டுக் கார் என்பதை அறிந்து கொண்ட போலீசார் சேஸிங் செய்துள்ளனர்.
போலீசார் விரட்டுவதை தெரிந்து கொண்ட திருடன், காரை சந்து பொந்தெல்லாம் ஓட்டியுள்ளார். கடைசியாக குறுகலான தெருவுக்குள் சென்றதும் பொதுமக்கள் தடுத்துள்ளனர். அதை சற்றும் பொருட்படுத்தாத திருடன் பொதுமக்களை இடித்து தள்ளியபடி முன்னோக்கி சென்றுள்ளார். ஆனால், தொடர்ந்து முன்னேற முடியாததால் காரை வேகமாக ரிவர்சில் எடுத்துள்ளார். அதில், நெருவோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை இடித்து சின்னாபின்னமாக்கி உள்ளார். காரை திருடிக் கொண்டு ஓடியவரை போலீசாரும், பொதுமக்களும் சேர்ந்து மடக்கிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More Stories
மலேசியாவில் திடீரென தீ விபத்து… ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து சேதம்!
பசுமை எரிசக்தி, தொழில்நுட்ப துறைகளில் புதிய ஒப்பந்தங்கள்….இந்தியா – தென்கொரியா மெகா கூட்டணி!
ட்ரோன்கள், குண்டுகள் விற்பனை.. பெண் தொழிலதிபர் அதிரடி கைது!