September 10, 2026

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…வானிலை மையம் அலர்ட்!

கோவை, நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் அதிகரித்து வந்தது. நீலகிரி உள்ளிட்ட பல இடங்களில் அடர்பனி கொட்டியது. இதன் காரணமாக குளிரின் தாக்கம் அதிகம் இருந்தது. பனிக் கொட்டத் தொடங்கியப் பின் மழை பெய்யவில்லை. ஆனால், நேற்று மாலையில் இருந்து பனியின் அளவு குறைத்து வெட்கையின் தாக்கம் பல மாவட்டங்களில் தெரிந்தது.

இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவில் இருந்து இன்று சில இடங்களில் லேசான மழை பெய்தது. இதே போன்று நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று (ஜனவரி 1) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

You may have missed