ஹோட்டலில் காதலனுடன் சிக்கிய மனைவி 12 அடி உயரத்தில் இருந்து குதித்து ஓட்டம்

பாக்பாத் : உத்தர பிரதேசத்தில் ஹோட்டலில் காதலனுடன் தங்கியிருந்த மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்ததால், 12 அடி உயர ஹோட்டல் கூரையில் இருந்து, அந்த பெண் குதித்து தப்பியோடினார்.

உ.பி.,யில் உள்ள பாக்பாத் மாவட்டத்தின் ககோர் கிராமத்தை சேர்ந்த இளைஞர், 2019ல் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார்.

அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்னரே பல ஆண்களுடன் தொடர்பு இருந்துள்ளது.

இது, திருமணத்துக்கு பின்னும் தொடர்ந்துஉள்ளது. ஆண்கள் தொடர்பை கைவிடுமாறு கண்டித்த கணவரை கொன்று விடுவதாக அந்த பெண் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, கணவர் போலீசில் புகார் அளித்தார். அவர்களுக்கு கடந்த 16ல் போலீசார் கவுன்சிலிங் அளித்தனர்.

இந்நிலையில், அன்று பிற்பகலில் காதலன் சோபித்துடன் அந்த பெண் பைக்கில் ஹோட்டலுக்கு சென்றதாக கணவர் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து கணவர் மற்றும் மாமியார் அந்த பெண்ணை தேடி பருட் நகரில் உள்ள ஹோட்டலுக்கு சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், ஹோட்டலின் மேல், 12 அடி உயரத்தில் உள்ள கூரையில் இருந்து குதித்து தப்பி சென்றார். அந்த பெண் கூரையில் இருந்து குதித்து தப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதையடுத்து, காதலன் சோபித்தை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் ஹோட்டல் உரிமையாளரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. இதற்கிடையே, தன் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதால், போலீஸ் பாதுகாப்பு தரும்படி கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

  • Related Posts

    வானிலை மையம் எச்சரிக்கை… தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்யும்!

    நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நெல்லை உள்பட 15 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

    தண்ணீர் வியாபாரம் என்ற பெயரில் சுரங்கம் தோண்டி மெகா மோசடி… இறுதியில் நடந்தது என்ன தெரியுமா…?

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யாருக்கும் தெரியாமல் நடந்து வந்த மிகப்பெரிய டீசல் திருட்டு மோசடியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த திருட்டில் ஈடுபட்ட இருவருமே உறவினர்கள் ஆவார்கள். மினரல் வாட்டர் வியாபாரம் நடத்துவதுபோல் அனைவரையும் ஏமாற்றிய இவர்கள், சுரங்கப்பாதை தோண்டி நிலத்தடி குழாய்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *