
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுமிகளை கொன்று இரு மூதாட்டிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளீஸ்வரி. இவரது மகளுக்கு கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டுக்கே வந்த அவர், 7 மற்றும் 5 வயதுடைய இருமகள்களுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் அப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு, வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணின் தாய் காளீஸ்வரி மற்றும் பாட்டி செல்லம்மாள் ஆகியோர் அவமானமாக உணர்ந்ததாகக் கூறப்படுகிறது.