தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு..! 2 சிறுமிகளை கொன்று விபரீத முடிவெடுத்த மூதாட்டிகள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுமிகளை கொன்று இரு மூதாட்டிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளீஸ்வரி. இவரது மகளுக்கு கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டுக்கே வந்த அவர், 7 மற்றும் 5 வயதுடைய இருமகள்களுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் அப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு, வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணின் தாய் காளீஸ்வரி மற்றும் பாட்டி செல்லம்மாள் ஆகியோர் அவமானமாக உணர்ந்ததாகக் கூறப்படுகிறது.

  • Related Posts

    திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

    திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

    போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *