எடப்பாடி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்- செங்கோட்டையன் புறக்கணிப்பு

சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கி அக்டோபர் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மானியக்கோரிக்கை விவாதங்களுக்காக இன்று கூடிய இந்த கூட்டத்திற்கு முன்பாக சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறையில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் கூடியுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில், விவாதிக்க வேண்டிய பொருள், அதில் பங்கேற்பவர்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை இணைக்க வேண்டும் என்று பேசிய செங்கோட்டையன், அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார்.

இன்று காலை சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார்.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *