பெயிலாக்கி விடுவேன்… 8-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த பள்ளி மேலாளர்!

உத்தரப்பிரதேசத்தில் 8-ம் வகுப்பு மாணவியை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த பள்ளியின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், தியோரியா மாவட்டத்தில் சதார் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்சோர்வுடன் இருந்துள்ளார். இதனால் அவரது தந்தை விசாரித்துள்ளார்.

அப்போது, தான் படிக்கும் பள்ளியின் மேலாளர் தேவேந்திர குஷ்வாஹா தன்னை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று கதவைப் பூட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதை வெளியே சொன்னால் தேர்வில் பெயிலாக்கி விடுவேன் என்றும், உன் குடும்பத்தை அழித்து விடுவேன் என்று மிரட்டினார் என்று கூறினார். இப்படி மிரட்டியே பல மாதங்களாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறியதைக் கேட்டு அவரது தந்தை அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தனியார் பள்ளியின் மேலாளர் தேவேந்திர குஷ்வாஹாவை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகிறது. அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

தடுப்புச்சுவரில் மோதி தூக்கி வீசப்பட்ட பைக்… விஏஓக்கள் 2 பேர் பலி!

தூத்துக்குடியில் சாலை தடுப்பில் டூவீலர் மோதி தூக்கி வீசப்பட்டதில் இரண்டு விஏஓக்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி டூவிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(62). கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தூத்துக்குடி பி அன்ட் டி காலனி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *