தமிழகம் வருகிறார் அமித்ஷா: திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்யத் திட்டம்

புதுச்சேரி / திருவண்ணாமலை:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 9-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஜனாதிபதி விருது வழங்கும் விழா: புதுச்சேரி காவல் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விருதினை வழங்குவதற்காக அமித்ஷா வருகை தருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக மாலை 4:55 மணிக்கு புதுச்சேரி சென்றடைகிறார். அன்றைய தினம் இரவு கடற்கரையையொட்டி அமைந்துள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

தொடர்ந்து, 9-ம் தேதி காலை 8:10 மணிக்கு புதுச்சேரி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று, காவல் துறையினருக்கு ஜனாதிபதி விருதினை வழங்குகிறார்.

திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம்: நிகழ்ச்சி நிறைவடைந்ததும், காலை 10:50 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா, அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து, அங்குள்ள ஸ்ரீ ரமண ஆசிரமத்திற்கும் செல்ல திட்டமிட்டுள்ளார்.

ஆன்மிக வழிபாடுகளை முடித்துக் கொண்டு திருவண்ணாமலையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்பும் அவர், அங்கிருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.