அதிமுக மாஜி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உறுதி…
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சிவசேனா கட்சி 2023ல் தொடர்ந்த வழக்கில் ஒரு கட்சியின் எம்எல்ஏக்களுக்காக கொறடாவை நியமிக்கும் அதிகாரம் அந்த கட்சியின் பொதுச்செயலாளருக்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அந்த வகையில், அதிமுக உறுப்பினர்களுக்கான கொறடாவை நியமிக்கும் அதிகாரம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குதான் உள்ளது. மேலும், அவர் நியமித்த கொறடாவின் உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் மீதும் கட்சி தாவல் விதிகளின்படி நடவடிக்கை உறுதி. அவர்களைமுதலமைச்சரே தனியாக சந்தித்த நிகழ்வு சாட்சியாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More Stories
தமிழக வெற்றிக் கழக அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி கண்டனம்: “அரசியலில் நாகரிகமும் கண்ணியமும் காக்கப்பட வேண்டும்”
லண்டனில் அஜித் பங்கேற்கும் சர்வதேச கார் பந்தயம்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!
ரூ.20,000 கடனுக்காக தாய், சேய் உயிரிழப்பதா? – கொத்தடிமை முறையை ஒழிக்க வேல்முருகன் ஆவேசக் கோரிக்கை!