11ம் வகுப்பு மற்றும் +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் வரும் 18ம் தேதி முதல் 30ம் தேதி வரை மேல்நிலை துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் மாவட்ட வாரியான சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் பதிவுகட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்
இந்த ஆண்டு 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக துணைப் பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை மறுதேர்வுகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் புறப்படுகிறார் முதல்வர் விஜய்: பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணம்!
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்