தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பல கருத்துக் கணிப்புகளை தவிடு பொடியாக்கி முதன்முறையாக தேர்தலை சந்தித்த விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. எனினும் ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 என்ற எண்ணிக்கை இல்லாத நிலையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரி வந்தது. காங்கிரஸ் திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தவெகவுடன் கூட்டணியில் இணைந்துவிட்ட நிலையில், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளிப்பதாகவும், அதேசமயம், திமுகவுடனான கூட்டணியில் தொடர்வதாகவும் தெரிவித்திருக்கின்றனர்
இந்தசூழலில் தான், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு எண்ணிக்கை 120ஆக உயர்ந்திருக்கிறது. ஏற்கனவே, 3 முறை ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க வலியுறுத்தியிருந்த நிலையில், இன்று 4-வது முறையாக ஆளுநரை சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் தனது பட்டினம்பாக்கம் இல்லத்தில் இருந்து ஆளுநர் இல்லத்திற்கு சென்ற நிலையில், பாதியிலேயே மீண்டும் வீட்டிற்கு திரும்பியது பேசுபொருளாகியிருந்தது. மேலும், ஆளுநர் கேரளா செல்லவிருப்பதாக தகவல் பரவிய நிலையில், விஜய் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக பார்க்கப்பட்டது. இந்த சூழலில் தான், ஆளுநரின் கேரளா பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம், விஜய்க்கு ஆட்சியமைக்க விரைவில் அழைப்பு வரலாம் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories
வேலைவாய்ப்புக்குப் பதிலாக லத்தி சார்ஜ்.. பாஜகவை விமர்சித்த ராகுல் காந்தி!
ஸ்வீட் கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது..
ஐபிஎல் போட்டியில் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்துவந்த 4 நபர்கள் கைது…