மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சிலர் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில், கடந்த ஒரு மாதமாக தங்கி கட்டிட வேலை செய்வதோடு போதை பொருட்கள் விற்பனையிலும் ஈடுபடுவதாக அடையாறு போலீஸ் துணை கமிஷனருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து அவரது தலைமையிலான தனிப்படை போலீசார் ரகசியமாக அவர்களை கண்காணித்தனர். பின்னர், செல்போனில் தொடர்புகொண்டு போதை பொருள் வாங்கும் போல் நம்பவைத்து, போதை பொருளுடன் தாம்பரம் ரயில் நிலையம் அருகே வரவழைத்துள்ளனர்.
அதன்படி 3 பேர் தாம்பரம் ரயில் நிலையம் அருகே வந்ததும் தனிப்படை போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்து அவர்களிடம் இருந்த 66 கிராம் ஹெராயின், 45 கிராம் மிக்சிங் பவுடர், 5 செல்போன்கள், 25 ஆயிரம் ரொக்கம பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், 3 பேரையும் கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த முகமது ஜனிப்கான் (26), துஷார் (19), ரகுமான் (22) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் யார், யாருடன் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!