கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் சுற்றிக் கொண்டிருந்த ராட்டினத்தின் கம்பி திடீரென உடைந்ததில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் உட்பட பலர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த ஐந்து பேரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
திருவனந்தபுரம், வேம்பாயத்தில் உள்ள ஹேப்பிலாந்து பொழுதுபோக்கு பூங்காவில் வியாழக்கிழமை ராட்டினம் சரிந்து விழுந்ததில், இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். பார்வையாளர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது, ராட்டினத்தின் கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டு அது தரையில் சரிந்து விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த நேரத்தில், சுமார் 26 முதல் 30 பேர் அந்த ராட்டினத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்த ஐந்து பேரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்துக்கான காரணம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காவில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

More Stories
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்!
பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடைக்காரர் கைது…
கஞ்சா, போதை பொருள் விற்பது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால் தவெக அமைச்சரின் ஆதரவாளர் படுகொலை: