பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த தத்தமஞ்சி அருகே வஞ்சிவாக்கம் செல்லும் வழியில், ஆரணியாற்றங்கரையில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த டேனியல் கண்ணன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் அமைந்துள்ளது. இக்குடோனில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. மேலும், குடோனில் இருந்த இயந்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் மூலப்பொருட்களிலும் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதிலும் கரும்புகை மண்டலம் போல் சூழ்ந்தது. அப்பகுதியை சேர்ந்த மக்கள் தண்ணீரை ஊற்றி, பிளாஸ்டிக் குடோனில் பற்றிய தீயை அணைக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை.
இதுகுறித்து பொன்னேரி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான தீயணைப்பு வாகனங்களில் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து வந்து, பிளாஸ்டிக் குடோனில் பரவியிருந்த தீயை பலமணி நேரம் போராடி தீயை அணைக்க முயற்சித்தனர். இவ்விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் தீப்பிடித்ததால், அவை அனைத்தும் பலத்த சேதமடைந்தன.
பின்னர் இன்று காலை வரை தீயணைப்பு வீரர்கள் போராடி, பிளாஸ்டிக் குடோனில் பரவியிருந்த தீயை முற்றிலும் அணைத்தனர். எனினும், அந்த பிளாஸ்டிக் குடோன் எரிந்து கருகிய நிலையில் பெருமளவில் நாசமடைந்து விட்டன. எனினும், இக்குடோனை சுற்றிலும் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் தடுக்கப்பட்டது. இப்புகாரின்பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரணமாக பிளாஸ்டிக் குடோன் தீப்பிடித்ததா அல்லது வேறு யாரேனும் நாசவேலையில் ஈடுபட்டனரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

More Stories
திருநெல்வேலி: பழிக்குப்பழி.. முன்விரோத தகராறில் பிளம்பர் கொடூர கொலை..
தருமபுரி: தண்ணீர் பாய்ச்சும் தகராறில் பெண் சுத்தியால் அடித்துக்கொலை..
காளஹஸ்தி: 2வது திருமணம் செய்ய மறுத்த பெண் ஒயரால் கழுத்தை இறுக்கி கொலை …