பறவைகள் சரணாலயத்தில் டாஸ்மாக் கடையா?- டாக்டர் அன்புமணி கண்டனம்
பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் விதிகளை மீறி டாஸ்மாக் கடை அமைப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரிக்கு அருகில் உள்ள பழவேற்காடு…
புதிய உச்சத்தில் தங்கம் விலை- இன்றைய நிலவரம் ரூ.82,320
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 20) சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 82,320 ரூபாயாக புதிய உச்சம் தொட்டுள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. உலக நாடுகள் இடையிலான போர்…
பொதுமக்கள் ஷாக்… ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் உயர்கிறது?
ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான சேவைகளுக்காக கட்டணம் விரைவில் உயர்த்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களின் அடையாள ஆவணங்களில் ஆதார் அட்டை முக்கிய பங்கு வகிக்கிறது. அரசுத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், மானியம் பெறவும், சலுகைகளைப் பெறவும் ஆதார் அட்டை அவசியமான அடையாளமாக…
பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம். வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய…
செக் வைக்கும் அமெரிக்கா- எச்1பி விசா விண்ணப்ப கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்வு!
அமெரிக்காவில் இதுவரை எச்1பி விசாவுக்கான விண்ணப்ப கட்டணம் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அதனை 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை பணியமர்த்த வேண்டுமென்றால்,…
நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் கோளாறு- டொனால்ட் டிரம்ப் தப்பியது எப்படி?
பிரிட்டனில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பயணம் செய்த ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரிட்டனில் இரண்டுநாள் அரசுமுறைபயணம் மேற்கொண்டார்.. அந்நாட்டு பிரதமர் கீர் ஸ்டார்மருடன் சந்திப்பு, அரச…
அதிர்ச்சி… சூடானில் மசூதி மீது டிரோன்கள் மூலம் தாக்குதல்- 70 பேர் உயிரிழப்பு
சூடானில் தொழுகையின் போது மசூதியில் துணை ராணுவத்தினர் நடத்திய டிரோன் தாக்குதலில் 70 பேர் பலியாகியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்…
வெடிகுண்டு மிரட்டல்… சென்னை, மும்பை உயர் நீதிமன்றங்களில் தீவிர சோதனை!
சென்னை, மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று (செப்டம்பர் 19) இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். அதேபோல்,…
பத்திரிகை சுதந்திரத்திற்காக பாஜக வீதியில் இறங்கும்- நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!
சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களைத் திமுக பிரமுகர் தரக்குறைவாக வசைபாடி மிரட்டல் விடுத்துள்ளது கண்டனத்திற்குரியது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களை திமுக பிரமுகர் தரக்குறைவாக பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில்…
ரஷ்யாவில் நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டிடங்கள்… சுனாமி எச்சரிக்கை
ரஷியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. இது 7.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 5-ம் தேதி ஏற்பட்ட…






