விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு:சேலம் காவல்துறை விளக்கம்

சேலம் மாவட்டத்தில் டிசம்பர் 4-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதற்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். இதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளனர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அதன் பின் விஜய் எங்கும் பிரசாரத்தை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், சேலத்தில் டிசம்பர் 4-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு நிர்வாகிகள் சார்பில் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை காவல்துறை நிராகரித்துள்ளது. இதுகுறித்து சேலம் காவல்துறை சார்பில் தவெகவினருக்கு விளக்க கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில்,” டிசம்பர் .4-ம் தேதி வெளி மாவட்டங்களில் பாதுகாப்பு பணிக்காக செல்வதால் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படும். விஜய் பிரசார நிகழ்ச்சியில் எவ்வளவு பேர் பங்கேற்பார்கள் என்ற தகவல் மனுவில் இல்லை. வெளி மாவட்டங்களில் இருந்து எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்ற தகவலும் இல்லை. குறைகளை நிவர்த்தி செய்து மனு அளித்தால் பரிசீலிக்கப்படும். அடுத்த முறை மனு அளிக்கும்போது 4 வாரங்களுக்கு முன்னர் மனு அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Related Posts

தகாத உறவு…மனைவியை வெட்டிக் கொன்று சடலத்துடன் செல்ஃபி எடுத்த கணவர்!

மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலத்துடன் செல்ஃபி எடுத்து அதை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ…

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை:10 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் கனமழை!

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் இன்று (டிச.1) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தெற்குக் கடற்பகுதியில் உருவான டிட்வா புயலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், புதுச்சேரி மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புயல் பாதிப்பு காரணமாக கல்வி துறையிலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *