சூழும் ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீதிக் கட்சி தொடங்கிய நாளையொட்டி தமிர்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார. அதில்,” நம் உரிமைக்குரலின் உதயம். இந்த மண்ணின் மைந்தர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் உரிய பங்கைப் பெற்றுத் தந்து, சமூகநீதியை நிலைநாட்டியே தீருவது என்ற பிராமணரல்லாதோர் அறிக்கையைச் (#NonBrahminManifesto) செயல்படுத்திக் காட்ட, நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய
நாள் இன்று.
நீதிக்கட்சியின் நீட்சியே நம் திராவிட மாடல் ஆட்சி எனத் தொடர்ந்து மெய்ப்பிப்போம். சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.


