கோவை விமான நிலையம் அருகே 19 வயது கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் கோவையில் ஒரு கல்லூரியில் தங்கி படித்து வருகிறார். இவர் கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் காரில் தனது ஆண் நண்பர் வினித்துடன் நேற்று இரவு பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வந்த மூவர், வினித்தை அரிவாளால் தாக்கி, அந்த மாணவியைத் தூக்கிச் சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், மயக்கம் தெளிந்த வினித், மாணவியை தேடியுள்ளார். அவரை காணாததால் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதனிடையே கல்லூரி மாணவியை தூக்கிச் சென்ற மூன்று பேரும் அவரை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், நிர்வாணமாக கிடந்த கல்லூரி மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் குறித்து வினித்திடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை விமான நிலைய பகுதியில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


