இரண்டு அலுவலகங்களில் ஒருநாள் கூட வேலைக்குச் செல்லாமல் லஞ்சத்தை ரூ.37.54 லட்சத்தை சம்பளமாக  ஐ.டி அதிகாரியின் மனைவி பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்​தான் மாநிலம், தகவல் தொழில்​நுட்ப துறை​யின் இணை இயக்​குந​ராக பணி​யாற்றுபவர் பிரத்​யு​மான் திக்​ஷித். இவரது மனைவி பூனம் திக்​ஷித். தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த ஓரி​யான்ப்ரோ சொல்​யூஷன்ஸ் மற்​றும் ட்ரீஜென் சாஃப்ட்​வேர் லிமிடெட் ஆகிய நிறு​வனங்​கள், ராஜஸ்​தான் மாநில அரசின் ஒப்பந்தங்களைப் பெற்று வந்துள்ளன.

இந்த ஒப்பந்தங்களை இந்த நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப துறையின் இணை இயக்குநரான பிரத்யுமான் திக்​ஷித் வழங்கியுள்ளார். இதற்காக இவர் லஞ்சமாக, இந்த இரண்டு நிறுவனங்களிலும் தனது மனைவி பூனம் திக்​ஷித்தை ஊழியராக பணிபுரிவதாக கணக்குகாட்டி வேலைக்கு அனுப்பாமலேயே சம்பளம் பெற்று வந்துள்ளார். இதையறிந்த ஒருவர், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இந்த பிரச்னை குறித்து லஞ்ச ஒழிப்​புத்​துறை விசா​ரணை நடத்த கடந்​த ஆண்டு உத்​தர​விட்​டது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், 2019-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு செப்டம்பர் வரை பூனம் திக்​ஷித்​தின் ஐந்து வங்கிக் கணக்​கு​களில் ஓரி​யான்ப்ரோ சொல்​யூஷன்ஸ் மற்​றும் ட்ரீஜென் சாஃப்ட்​வேர் லிமிடெட் ஆகிய நிறு​வனங்​கள் சம்​பள​மாக ரூ.37,54,405 செலுத்​தி​யது கண்​டறியப்​பட்​டது. ஆனால், இந்த காலக்​கட்​டத்​தில் இரண்டு அலு​வல​கங்​களுக்​கும் பூனம் திக்​ஷித் ஒரு நாள் கூட வேலைக்குச் சென்​ற​தில்​லை.

ஆனால்,அவர் வேலைக்கு சென்​ற​தாக கணக்கு காட்​டப்​பட்ட போலி வருகைப் பதிவேட்​டுக்​கு, அவரது கணவர் பிர​தி​யு​மான் திக்​ஷித் ஒப்​புதல் அளித்​துள்​ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் அரசின் மாநில உயர் பொறுப்பில் உள்ள அதிகாரியான  பிரத்​யு​மான் திக்​ஷித் மீது உயர்நீதிமன்றத்தின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.