தீபாவளி கொண்டாட்டம் காரணமாக தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் அக்டோபர் 21 அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் அக்டோபர் 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வெளியூரில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், அரசுஅலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோர் அவர்களது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவார்கள். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் (அக்டோபர் 21). 5 அன்று ஒரு நாள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு நேற்று இரவு உத்தரவிட்டது.
இந்த நிலையில் புதுச்சேரியிலும் அக்டோபர் 21-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்படுள்ளது. அன்றைய தினம் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அக்டோபர் 21 அன்று அரசு விடுமுறை என முதலமைச்சர் ரங்கசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.


