கச்சத்தீவை மீட்க வேண்டும்… பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கச்சத்தீவை மீட்பது குறித்து இலங்கை பிரதமரிடம் பேச வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமர சூரியாவுடன் மீனவர்கள் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,” கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை. இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அந்நாட்டு பிரதமரிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும்.

தமிழக மீனவர்கள் பிரச்னையில் தூதரக நடவடிக்கை மூலம் மத்திய அரசு தலையீட்டை தொடர்ந்து கோரி வருகிறோம். தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு 72 முறை கடிதம் எழுதியுள்ளேன் மாநில அரசின் முறையான ஒப்புதலை பெறாமல் மத்திய அரசால் கச்சத்தீவு இலங்கைக்கு மாற்றப்பட்டது.

தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை மீட்டெடுக்க இலங்கை பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் நீண்ட கால மற்றும் துயரமான பிரச்னைகளை தீர்க்க இது மிகவும் முக்கியமானதாகும்” என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

  • Related Posts

    திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

    திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

    போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *