ஹைதராபாத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர், நடிகையராக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்கள் மெகா ஹிட்டடித்தன. அத்துடன் இந்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா ஆகிய இருவரு சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும் வெளியில் சுற்றித் திரிந்தனர். அவர்கள் இப்படி சுற்றித் திரிந்த புகைப்படங்கள் வெளியாகின. இதனால் அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் , திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதற்கு இருவரும் பதில் அளிக்கவில்லை.
இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டாவின் இல்லத்தில் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு நேற்று நடைபெற்ற திருமண நிச்சயதார்த்ததில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இவர்களின் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


