சாட்டை துரைமுருகன் செய்யும் சேட்டை – மகளிர் ஆணையத்தில் தவெக புகார்

விஜய் பரப்புரையில் பங்கேற்ற பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், யூடியூப்பருமான சாட்டை துரைமுருகன் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புகார் செய்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனையொட்டி அனைத்து கட்சிகளும் பிரசாரம், கூட்டணி என விறுவிறுப்பான பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதே போல தவெக தலைவர் நடிகர் விஜய், தமிழ்நாடு முழுவதும் மக்களைச் சந்தித்து பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்தார்.

இந்த நிலையில், விஜய்யின் பரப்புரையில் பங்கேற்ற பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், யூடியூப்பருமான சாட்டை துரைமுருகன் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக நிர்வாகி இமயதமிழன் ஆன்லைனில் புகார் அளித்துள்ளார். அதில், சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட காணொலியை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *