நான் உனக்கு மாமா இல்லம்மா… சட்டமன்ற வளாகத்தை கலகலக்க வைத்த பாலகிருஷ்ணா!

ஆந்திரா சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது தன்னிடம் ஆசி வாங்க வந்த எம்எல்சி காவலி கிரேஷ்மாவிடம் நடிகர் பாலகிருஷ்ணா கூறிய விஷயம் அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தது.

ஆந்திரப் பிரதேச சட்டமன்றக்கூட்டத் தொடர் நேற்று நடைபெற்றது. அப்போது தெலுங்கு தேசம் சட்டமன்ற கட்சி அலுவலகத்திற்கு இந்துபுரம் எம்எல்ஏவும், பிரபல நடிகருமான நந்தமுரி பாலகிருஷ்ணா வந்தார். ஏற்கெனவே அங்கிருந்த பெண்கள்,  அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அவருடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டினர்.

அதே நேரத்தில் முதல் முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்த எம்எல்சி காவலி கிரேஷ்மா, பாலகிருஷ்ணாவை நோக்கி, என்னை ஆசீர்வதியுங்கள் மாமா என்றார். இதற்கு பாலகிருஷ்ணா தனது பாணியில், மாமா இல்லை, பாலய்யா மட்டும் தான் என்று புன்னகையுடன் கூறினார். இதனால் அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

இதற்குப் பிறகு பாலகிருஷ்ணாவிடம் அகண்டா 2 படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “எனது சகோதரர் பவன் கல்யாணின் படம் இந்த மாதம் 25-ம் தேதி வெளியாகிறது. படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன். டிசம்பர் 5-ம் தேதி அகண்டா-2 படத்தை திரையிட உள்ளோம் என்றார்.

அப்போது அரசின் காபி பிராண்ட் தூதராக இருக்குமாறு அமைச்சர்கள் பாலகிருஷ்ணாவை கேட்டுக் கொண்டனர். அதற்கு சாதகமான பதிலளிப்பதாக பாலகிருஷ்ணா கூறினார். இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வரக்கூடும் என்று தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. பாலகிருஷ்ணாவை அவரது ரசிகர்கள் பாலய்யா என்றே செல்லமாக அழைக்கின்றனர். அவர் நடித்த அகண்டா திரைப்படம் மிகப்பெரிய  வரவேற்பைப் பெற்றது. தற்போது அடுத்ததாக அகண்டா 2  பான் இந்தியா படமாக பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

  • Related Posts

    தமிழக அரசு கலைமாமணி விருது அறிவிப்பு- எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, அனிருத் தேர்வு

    தமிழ்நாடு அரசு 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி…

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று பிரம்மோற்சவ விழா… விஐபி தரிசனம் ரத்து!

    திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (செப்டம்பர் 24) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவில் பங்கேற்க பக்தர்கள் கூட்டம் திருப்பதியில் திரண்டு வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா புரட்டாசி மாதத்தில் நடைபெறுகிறது. இந்த விழா…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *