சென்னையில் உள்ள காரப்பாக்கம், காளியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஜீவா (வயது 27). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன் 21ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட, நண்பர் ஆனந்தராஜுடன் மதுபானம் அருந்தி இருக்கிறார். பின் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அச்சமயம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவத்தைத்தொடர்ந்து இருவரும் ஒருவரையொருவர் தாக்கி இருக்கின்றனர். ஆனந்தராஜ் ஜீவாவை கீழே தள்ளி சாலையோரம் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஜீவா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்கு போராட, அவ்வழியாக சென்ற மக்கள் அவசர ஊர்தியில் மீட்டு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு மரணம் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சேலத்தில் தலைமறைவாக இருந்த ஆனந்தராஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், ஜீவா என்னிடம் ரூ.3 ஆயிரம் கடன் வாங்கினார். அதனை திருப்பி கேட்டபோது தாமதம் செய்து வந்தார். பிறந்தநாளுக்கு மதுஅருந்த சென்றபோது, வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் கல்லால் தாக்கியதில் அவர் இறந்திவிட்டார் என தெரிவித்துள்ளார்.

More Stories
“மின்துறை வெள்ளை அறிக்கையில் தவெக அரசு மறைத்த உண்மைகள்…” – செந்தில் பாலாஜி:
தி.நகரில் அடுத்தடுத்து 2 துப்புரவு தொழிலாளர்கள் அடித்து கொலை:
பெரம்பூருக்கு பேருந்தில் கிளம்பிய CM விஜய்!