சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு காவல் நிலைய தலைமை காவலர் ஜெயா செல்வி. காவல் நிலையத்தில் அவர் மட்டும் பணியில் இருந்த போது அங்கு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள்
அண்ணன் தம்பிகளான சூர்யபிரகாஷ் (எ) சூர்யா (27) , தங்கசாமி என்ற நவீன் இருவரும் நாங்கள் வீட்டில் இல்லாத போது எங்களை வீட்டிற்கு வந்து விசாரித்த போலீஸ் யார் என்று சொல்ல மாட்டியா? என்றும் தகாத வார்த்தைகளால் பெண் காவலரை தீட்டியுள்ளனர். இனியும் எங்களை தேடி வீட்டிற்கு போலீஸ் வந்தால் கொல்லாமல் விடமாட்டோம் என்று மிரட்டியுள்ளனர்.
பெண் காவலர் இருவரையும் காவல் நிலையத்தை விட்டு வெளியே போக சொல்லியும் போகாமல் தகராறு செய்தவர்களை ரோந்து பணிக்கு சென்ற ஆய்வாளர் மற்றும் போலீசாரை வரவழைத்தார். காவல் நிலையம் வந்த ஆய்வாளர், சரித்திர பதிவேடு குற்றவாளிகளான அண்ணன் தம்பிகளை பிடித்து வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இருவர் மீதும் பெண் காவலரை மிரட்டியாக வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்கு சென்று பெண் காவலரை சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More Stories
இன்று தாக்கல் செய்யப்படுகிறது தமிழக பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!
தனிநபர் விமர்சனம் வேண்டாம், தரமான அரசியல் பண்ணுங்க!” — எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி !எக்ஸ்தளத்தில் அறிவுறுத்தல்
திருப்பரங்குன்றம் பாமக ஒன்றிய செயலாளர் தாயார் தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு கைது செய்யாத ஆஸ்டின்பட்டி போலீசார் தெய்வம் தரப்பில் குற்றம் சாட்டு!